25/04/2026
📢 விலங்கு நல ஆர்வலர்களே... உங்கள் மௌனம் எதைக் குறிக்கிறது? 🐾💔
சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்தடை அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட அஜாக்கிரதையால், தையல் பிரிந்து ஒரு நாயின் குடல்கள் வெளியே சரிந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நெஞ்சைப் பிளக்கிறது.
இந்தக் கொடுமைக்கு எதிராக ஏன் இன்னும் பல முன்னணி NGO-க்களும், அமைப்புகளும் மௌனம் காக்கிறீர்கள்?
எங்கள் கேள்விகள் இவைதான்:
• தேர்ந்தெடுத்த போராட்டமா?: சில பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுப்பதும், அரசு அல்லது அதிகார மையங்கள் சம்பந்தப்பட்ட தவறுகளுக்கு மௌனம் காப்பதும் என்ன நியாயம்?
• அரசியல் வேண்டாமே: விலங்கு நலன் என்பது உயிர்களைக் காப்பதே தவிர, அதில் அரசியல் லாபமோ அல்லது ஆதரவு நிலையோ பார்ப்பது உண்மையான சேவையாகாது.
• யார் பொறுப்பு?: கருத்தடை என்ற பெயரில் உரியப் பயிற்சி இன்றி அல்லது கவனக்குறைவாகச் செயல்பட்டு ஓர் உயிரைப் பறித்தவர்கள் மீது ஏன் இன்னும் நட�